எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

மகளிர் இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம்: ரஜினிகாந்த் பேட்டி

கட்சியே தொடங்காத போது கமலுடன் கூட்டணி குறித்து பேச முடியாது. நான் இன்னும் கட்சி தொடங்கவில்லை என்பதால் கமல் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:05 pm

Raghavendran

ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி செயலாளர்களுடன் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

ரஜினி மக்கள் மன்றத்துக்கு மகளிர் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. நான் தொடங்கவிருக்கும் கட்சியில் மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏனென்றால் மகளிருக்கு முன்னுரிமை வழங்கும் நாடுகள் முன்னேறி இருக்கின்றன. அதுபோல மகளிர் இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம்.

தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். கட்சியே தொடங்காத போது கமலுடன் கூட்டணி குறித்து பேச முடியாது. நான் இன்னும் கட்சி தொடங்கவில்லை என்பதால் கமல் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கர்நாடக விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது. எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்தாகும். ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் கர்நாடக ஆளுநர் அதுபோன்று செய்திருக்கக் கூடாது.

அணைகளின் அதிகாரம் ஆணையத்திடம் இருக்கவேண்டும், கர்நாடகாவிடம் இருந்தால் நல்லதல்ல. காவிரி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகாவை ஆளப்போகும் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் மதிக்க வேண்டும். மெரினாவில் நடக்கவுள்ள நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காவல்துறை காரணமின்றி தடை விதிக்காது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.