கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

கிருஷ்ணசாமியின் பிள்ளைகளுக்கு அரசு என்ன பதில் சொல்லும்? கனிமொழி எம்பி கேள்வி

திமுக மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி, மறைந்த கிருஷ்ணசாமி உடலுக்கு திங்கள்கிழமை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:59 pm

Raghavendran

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி விளக்குடியைச் சேர்ந்தவர் ரமேஷ் (எ) கிருஷ்ணசாமி (47), மகனை நீட் தேர்வுக்காக கேரள மாநிலம் எர்ணாகுளம் அழைத்துச் சென்றார். 

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தேர்வின் போது மகனை தேர்வறைக்குள் விட்டுவிட்டு வெளியே காத்திருந்தபோது கிருஷ்ணசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்நிலையில், திமுக மாநிலங்களை உறுப்பினர் கனிமொழி, மறைந்த கிருஷ்ணசாமி உடலுக்கு திங்கள்கிழமை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்திதபோது கனிமொழி கூறியதாவது:

மாணவர்கள், பெற்றோர்களை தவிக்க விடும் நீட் தேர்வு அவசியமா என அரசு சிந்திக்க வேண்டும். கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவதே சரியான தீர்வு. கிருஷ்ணசாமியின் பிள்ளைகளுக்கு அரசு என்ன பதில் சொல்லும்? என்று கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.