அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

என் முகத்தில் கரி பூச நினைத்து, அவர்கள் பூசி கொண்டனர்: கமல் கட்சி அழைப்பு குறித்து தமிழிசை பதிலடி

முதலில் கமல்ஹாசன் நாகரீகமான அரசியலில் ஈடுபட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:28 pm

Raghavendran

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து விட்டதாக தனக்கு மின்னஞ்சல் வந்துள்ளதாக தனது ஐபேட்-இல் ஆதாரத்துடன் குற்றம்சாட்டினார்.அத்துடன் தனது மின்னஞ்சல் முகவரி எப்படி கிடைத்தது? கையில் கிடைக்கும் அனைத்து மின்னஞ்சல் முகவரிகளுக்கு எல்லாம் கமல் கட்சியினர் அழைப்பு அனுப்பி ஆள் சேர்க்கிறார்கள். கமல் பொய்யான கட்சி நடத்தி வருகிறார் என்று குற்றசாட்டுகளை அடுக்கினார்.

இதுகுறித்து கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், கட்சியில் சேர யாருக்கும் அழைப்பு அனுப்பவில்லை. எங்கள் இணையதள பக்கத்தில் பதிவு செய்தால் மட்டுமே, அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும். உங்களிடமிருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. உங்களைப் போல நாங்களும் படம் காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா... 

ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்துக்கு அஞ்சினால் செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது. அதுவரை.. என்பது போன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கமல் கட்சியின் விளக்கத்துக்கு பதிலடி அளித்துள்ளார். இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:

நான் ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர், ஒரு சிறிய குழந்தைக்குக் கூட தெரியும் (இதை விட மோசமான வார்த்தையை நான் பயன்படுத்த விரும்பவில்லை), ஒரு கட்சியின் தலைவர் இப்படி வேறு கட்சிக்கு உறுப்பினராக விண்ணப்பிக்க முடியமா என்பது! இப்போது உள்ள தொழில்நுட்பத்தில் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம். முதலில் செய்த தவறை ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த தவறை சரிசெய்துகொள்கிறேன் என்று ஒரு தலைவர் கூறுவதுதான் ஆரோக்கியமானது.

முதலில் கமல்ஹாசன் நாகரீகமான அரசியலில் ஈடுபடவேண்டும். தமிழகத்தில் நாகரிகமான அரசியலை எடுத்து செல்வதே பாஜகவின் கொள்கை. என் முகத்தில் கரி பூச நினைத்து, அவர்கள் பூசி கொண்டனர். அதிகாரப்பூர்வமாக எனது மின்னஞ்சல் முகவரியில் உங்களுடைய உறுப்பினர் எண் எப்படி வந்துள்ளது என்பதற்கு முதலில் பதில் கூறுங்கள் என்று கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.