குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

தஞ்சை பெரிய கோயில் ராஜராஜ சோழன் சிலை காணவில்லை: மாவட்ட எஸ்பி தகவல்

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன் உள்ளிட்ட ரூ.100 கோடி மதிப்பிலான சிலைகள் காணவில்லை என்று மாவட்ட எஸ்பி செந்தில்குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:23 pm

Raghavendran

தஞ்சை பெரிய கோயிலில் சிலைகள் காணாமல் போனது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக, 50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறப்படும் ராஜராஜ சோழன் உள்ளிட்ட சிலைகள் தொடர்பாக தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை எஸ்பி செந்தில்குமார் கூறியதாவது:

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன் சிலை, அவரது மனைவி லோகம்மாள் சிலை உள்ளிட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 13 சிலைகளைக் காணவில்லை. காணாமல் போன சிலைகள் குஜராத் அருங்காட்சியகத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது, அதுகுறித்து விரைவில் குஜராத் சென்று விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சிலைகள் காணவில்லை என்று முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சை பெரிய கோயிலில் காணாமல்போன ராஜராஜ சோழன் சிலை, லோகம்மாள் சிலை உள்ளிட்ட சிலைகள் விரைவில் மீட்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.