இந்த சம்பவம் குறித்து பழ நெடுமாறன் கூறியிருந்தது, "மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திரா காந்தி வந்திருந்தார். நான் உட்பட சில கட்சித் தலைவர்களுடன் இந்திரா காந்தி திறந்த காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே ஏராளமான திமுகவினர் கருப்புக் கொடியுடன் திரண்டனர். அங்கிருந்த வரவேற்பு பதாகைகளை கீழே தள்ளினர். நாங்கள் தெற்கு முக்கிய சாலையை அடைந்த போது, திமுக தொண்டர் ஒருவர் இந்திராவை தாக்கினார். இந்திராவை காப்பாற்ற நாங்கள் எவ்வளவோ முயன்றும், போராட்டக்காரர்கள் தாக்கியதில் இந்திரா காந்திக்கு காயம் ஏற்பட்டது" என்று கூறியிருந்தார்.