டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்: தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:47 pm

ANI


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள தான்ரிபோரா பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் இன்று காலை அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் சரமாரியாக சுட்டனர். இந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் பாதுகாப்பு படையினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.