விஜயவாடா: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழை, வெள்ளம் காரணமாக குண்டூர் - நடிகுடி இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்ததால், குண்டூர் - செகுந்தராபாத் இடையேயான பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
நேற்று குண்டூர் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் 10 முதல் 21 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது. வெள்ளம் காரணமாக சாலைப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு பல இடங்களில் கயிறுகளைக் கட்டி மக்கள் சாலைகளைக் கடந்து வருகின்றனர்.
உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளம் பாதித்த மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கண்டுபிடி கண்ணே!

தெரியுமா?
இன்றைய ராசி பலன் (26.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (26.04.2026) - கடகம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

