நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

கூடங்குளம்: 3, 4-வது அணு உலைக்கு இன்று பூமி பூஜை

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமையவிருக்கும் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:33 pm

PTI

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமையவிருக்கும் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

ரஷ்ய நாட்டு உதவியுடன் இந்த இரு அணு உலைகளும் அமைக்கப்படுகிறது.

கூடங்குளத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர், மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளுக்கான இயக்குநர் பி.ஏ.பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி இந்த மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகள் அமைக்கப்படுகிறது. இரு அணு உலைகளும் தலா 1000 மெகா வார்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். அணு உலை கட்டுமானப் பணிகள் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் கூறினர்.

கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது அணு உலை பல்வேறு போரட்டங்களுக்குப் பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தியை தொடங்கியுள்ளது. இரண்டாம் அணு உலைகளுக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இரண்டாம் அணு உலை இயங்கத் தொடங்கும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.