கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

விருதுநகர் அருகே ரயில்வே கேட்டை அடைப்பதை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கூரைக்குண்டு கிராமத்திற்கு செல்லும் சாலையில் குறுக்கே ரயில்வே கேட் உள்ளது. இந்தக் கேட்டை கடந்துதான் கூரைக்குண்டு,

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:51 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே சாலையின் குறுக்கே உள்ள ரயில்வே கேட்டை நிரந்தரமாக அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கூரைக்குண்டு கிராமத்திற்கு செல்லும் சாலையில் குறுக்கே ரயில்வே கேட் உள்ளது. இந்தக் கேட்டை கடந்துதான் கூரைக்குண்டு, மாத்தநாயக்கன்பட்டி, குல்லூர்சந்தை வரையிலான சாலையில் பொதுமக்கள் செல்ல வேண்டும். மேலும், ஆட்சியர் அலுவலகத்திற்கும் வருவதற்கும் குறுக்க சாலையாக உள்ளது. இந்நிலையில், ரயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு பணிகள் செய்வ்தாக கூறி ரயில்வே நிலைய அதிகாரிகள் தாற்காலிகமாக கடந்த ஒரு வாரமாக திறக்காமல் அடைக்கப்பட்டுள்ளது.

இதனால், கூரைக்குண்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட ரயில்வே கேட் பகுதியில் நிரந்தரமாக அடைக்கும் வகையிலான தடுப்பு சுவர் வேலை நடந்து வருவது பொதுமக்களுக்கு  தெரியவந்தது. இக்குறிப்பிட்ட இடத்தில் கேட் பராமரிப்பு செய்வதாக கூறிவிட்டு தடுப்பு சுவர் எழுப்ப கூடாது என்பதை கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் இப்பணியை தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கூரைக்குண்டு ஊராட்சி தலைவர் வேலாயுதம் தலைமையில் கிராம மக்கள் சார்பில் ஏற்கனவே கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கிராம மக்கள் தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்த ரயில்வே நிலைய பொறியாளர் ஞானசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் ஊராட்சி தலைவர் வேலாயுதம் மற்றும் கிராம மக்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், மதுரை ரயில்வே கோட்ட பொறியாளரிடம் நேரில் சென்று முறையிடுமாறு அதிகாரிகள் தெரிவி்த்தனர். அது வரையில் பராமரிப்பு பணிகள் நிறுத்தி வைப்பதாக உறுதி கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.