சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

விருதுநகர் மாவட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க நிரந்தர மையங்கள் அமைப்பு

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரையில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்காதவர்கள் பயனடையும் வகையில் அந்தந்த பகுதி வட்டாட்சியர் அலுவலகங்களிலும், நகராட்சி ஆணையாளர்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:37 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரையில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்காதவர்கள் பயனடையும் வகையில் அந்தந்த பகுதி வட்டாட்சியர் அலுவலகங்களிலும், நகராட்சி ஆணையாளர் அலுவலகங்களில் நிரந்தர மையம் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆதார் அடையாள அட்டை என்பது அனைத்து நலத்திட்ட உதவிகளும் பெறுவதற்கான முக்கிய ஆவணம் என அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு பெற்று ஒப்புதல் சீட்டுக்கள் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், ஒப்புதல் சீட்டுக்கள் இல்லாதவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அவ்வாறு அறிவிக்கப்பட்ட பின் ஒப்புதல் சீட்டு இல்லாதவர்கள் மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட கணக்கெடுப்பில் விட்டுப்போன நபர்கள் சம்பந்தப்பட்ட அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள நிரந்தர மைய பொறுப்பு அலுவலரிடம் உரிய படிவத்தினை பூர்த்தி செய்து பொறுப்பு அலுவலர்களின் கையொப்பம் பெற்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

ஆதார் அடையாள அட்டைகளுக்கு புகைப்படம் எடுக்காதவர்களுக்காக நிரந்தர மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளின் விவரங்கள் வருமாறு:

விருதுநகர்-வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையாளர் அலுவலகம்

சிவகாசி-வட்டாட்சியர் அலுவலகம்,நகராட்சி ஆணையாளர் அலுவலகம்

அருப்புக்கோட்டை-வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையாளர் அலுவலகம்

சாத்தூர்-வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையாளர் அலுவலகம்

ஸ்ரீவில்லிபுத்தூர்-வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையாளர் அலுவலகம்

ராஜபாளையம்-வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி ஆணையாளர் அலுவலகம்

திருத்தங்கல்-நகராட்சி ஆணையாளர் அலுவலகம்,   

காரியாபட்டி-வட்டாட்சியர் அலுவலகம்,

திருச்சுழி-வட்டாட்சியர் அலுவலகம்,

இக்குறிப்பிட்ட பகுதிகளில் கடந்த 5-ம் தேதி முதல் நிரந்தர மையம் அமைத்து  செயல்பட இருக்கிறது. இம்மையத்தில் செவ்வாய்கிழமை தவிர ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிவரையில் செயல்படும். எனவே அனைத்து நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் வங்கி கணக்கிற்கும் ஆதார் அடையாள அட்டை தேவைப்படுவதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.