சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள ஒசூர் ஐ.டி. பார்க் திட்டம்!

ஒசூர்: திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் உள்ள ஒசூர் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (ஐ.டி. பார்க்) திட்டத்துக்கு அதிமுக அரசு புத்துயிர் அளிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:10 pm

டி.ஞானபிரகாசம்

ஒசூர்: திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் உள்ள ஒசூர் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (ஐ.டி. பார்க்) திட்டத்துக்கு அதிமுக அரசு புத்துயிர் அளிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்பதால் அவர்கள் ஆர்வமாக உள்ளனர். ஒசூர் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கு 2007 பிப்ரவரியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். இதற்காக 174 ஏக்கர் அரசு நிலம் தயாராக இருந்தும் இந்தத் திட்டத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

ஒசூர் பூங்காவில் இடம் கேட்டு 17 நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ளன. விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் ஆகிய நிறுவனங்கள் அவ்வாறு பதிவு செய்து 4 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றன.

இத் திட்டத்துக்காக சுமார் 14,000 சதுர அடியில் எல்காட் அலுவலகம் அமைக்கவும், சாலை, மின்சாரம், தொலைபேசி,அகண்ட அலைவரிசை உள்ளிட்ட வசதிகளுக்கு ரூ. 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இங்கு ஒரு ஏக்கர் நிலம் ரூ.67 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், தொழிற்சாலைகளை அமைக்க நில ஒதுக்கீடு பெற்ற ஒரு சில நிறுவனங்களும் எந்த வசதியும் இல்லாததால் ஆரம்ப கட்டப் பணிகளைக் கூடத் தொடங்க முடியாமல் உள்ளன.

சர்வதேச முன்னணி நிறுவனங்களும் ஒசூர் ஐ.டி. பூங்காவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டின. ஆனால், அந்நிறுவனத்தினர் ஓசூரில் தங்கள் தொழிலை தொடங்கி விட்டால் மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தொழிலைத் தொடங்க முன் வரமாட்டார்கள் என்று கருதித்தான் ஒசூர் ஐடி பார்க் திட்டத்துக்கு அப்போதைய அரசு கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

நில ஓதுக்கீடு பெற்ற பல நிறுவனங்கள் போதிய அனுபவமில்லாதவை என்றும் அதனால்தான் அவை தொழிற்சாலைகளைத் தொடங்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எது, எப்படியோ,தகவல் தொழில்நுட்பப் பூங்காத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த தற்போது பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.