சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சிப்காட் நிறுவனம்: 50 ஆயிரத்திற்கு வாங்கி 35 லட்சத்திற்கு விற்பனை

ஒசூர்: ஒசூருக்கு கிழக்கில் 2-வது சிப்காட் அமைந்தபோது   1984-ம் ஆண்டு 780 ஏக்கர், 1997-ல் 200 ஏக்கர், 2007-ல் 150 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டது. சிப்காட் நிறுவனம் 1984-ல் விவசாயிகளிடம் வாங்கிய ஒரு ஏக்கர்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:25 pm

டி.ஞானபிரகாசம்

ஒசூர்: ஒசூருக்கு கிழக்கில் 2-வது சிப்காட் அமைந்தபோது   1984-ம் ஆண்டு 780 ஏக்கர், 1997-ல் 200 ஏக்கர், 2007-ல் 150 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டது.

சிப்காட் நிறுவனம் 1984-ல் விவசாயிகளிடம் வாங்கிய ஒரு ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு ரூ.2239. விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி விவசாயிகளிடம் இருந்து 780 ஏக்கர் நிலத்தை வாங்கி கூடுதல் விலைக்கு தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

பின்னர் 1997-ல் சிப்காட் விரிவாக்கத்திற்கு விவசாயிகளிடம் இருந்து ஒரு ஏக்கர்  1,00,660  என விலை நிர்ணயம் செய்தனர்.

2007-ல் மீதி இருந்த 150 ஏக்கர் நிலத்தை ஏக்கர்  50 ஆயிரத்திற்கு விலை நிர்ணயம் செய்து கையகப்படுத்தியதை தொடர்ந்து விவசாயிகள் நீதிமன்றம் சென்றனர். விவசாயிகளிடம் இருந்து  50 ஆயிரத்திற்கு வாங்கி ஒசூரில் வெக் இன்டஸ்ட்ரீஸ், நெரோலேக் பெயின்ட்ஸ், டிரெக்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய 3 பன்னாட்டு நிறுவனங்களுக்கு  ரூ.35 லட்சத்திற்கு விற்பனை செய்தது சிப்காட் நிறுவனம். இந்த நிலங்களை இழந்த விவசாயிகள் கூலி வேலைக்குச் செல்லும் அவலம் ஏற்பட்டது. உரிய, நியாயமான விலையும் கிடைக்கவில்லை.

1994-ல் ஒரு ஏக்கர் நிலம்  1 லட்சம் விலை குறைவு என ஒசூர் நீதிமன்றத்தில் விவசாயிகள் முறையீடு செய்தனர். ஒசூர் நீதிமன்றம் விவசாயிகளுக்கு  4,77,600 இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. சிப்காட் நிறுவனம் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை, கூடுதல் சந்தை மதிப்பு, வெகுமதி தொகை, வட்டி என  14,75,000 விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 2007-ல் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு  22 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு இந்தத் தொகையை சிப்காட் நிறுவனம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

விவசாயிகளின் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி ஆயிரம் மடங்கு அதிக விலைக்கு விற்றுவிட்டு  இந்த ஏழைகளுக்கு நீதிமன்றம் அறிவித்த தொகையைக்கூட தரத் தயங்குவது ஏன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.