மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தொகுப்பு வீடுகளுக்காக 30 ஆண்டுகளாக போராட்டம்

திருத்தணி, ஜூலை 11: வீட்டுமனைப்பட்டா இல்லாததால் அரசு வழங்கும் தொகுப்பு வீடுகளை பெற முடியாமல் இருளர் இன மக்கள் 30 ஆண்டுகளாக பாழடைந்த மண் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். ஆர்.கே.பேட்டையை அடுத்த சின

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:29 am

திருத்தணி, ஜூலை 11: வீட்டுமனைப்பட்டா இல்லாததால் அரசு வழங்கும் தொகுப்பு வீடுகளை பெற முடியாமல் இருளர் இன மக்கள் 30 ஆண்டுகளாக பாழடைந்த மண் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.

ஆர்.கே.பேட்டையை அடுத்த சின்ன நாகபூடி ஊராட்சியில் அடங்கியுள்ளது இருளர் காலனி. வாழ்க்கையைப் போலவே நைந்து, பிய்ந்து போய் உள்ளது இவர்கள் வசிக்கும் மண் குடிசைகளும். வீட்டுப் மனைப்பட்டா, ரேஷன் அட்டை, சாதிச் சான்றிதழ் கேட்டு 10 ஆண்டுகளாக வருவாய் துறையினரிடம் மனு கொடுத்து வருகின்றனர். எதுவும் நிறைவேறவில்லை.  வீட்டுமனை பட்டா இல்லாததால் அரசு வழங்கும் தொகுப்பு வீடு முடியவில்லை. இவர்களுக்கு பட்டா வழங்கலாம் என ஊராட்சி சார்பில் கிராமசபை தீர்மானம் நிறைவேற்றி அதற்கான நகலை ஆட்சியருக்கு அனுப்பியும் வருவாய் துறையினர் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

ஊராட்சி சார்பில் தெருவிளக்கு, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலை வசதி செய்து தரவில்லை. அதற்காக கொட்டப்பட்ட மண் அப்படியே கிடக்கிறது.  தற்போது மழைகாலம் தொடங்கியுள்ள நிலையில் அவ்வப்போது பெய்துவரும் மழைக்கு மண் குடிசைகள் தாக்குப் பிடிக்க முடியாமல் இடிந்து விழும் நிலை உருவாகியுள்ளது.  

இதுகுறித்து அப்பகுதி முதியோர் ஒருவர் கூறும்போது: இப்பகுதியில் குடியேறி 20 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை எத்தனையோ அதிகாரிகள் அவ்வப்போது வந்து பார்த்து செல்கிறார்களே தவிர நிரந்தரமாக இங்கு வாழ்வதற்கு பட்டா தரவில்லை.

அரசு உதவி மற்றும் சலுகைகள் பெற சாதிச் சான்றிதழ், வீட்டு மனைப்பட்டா, ரேஷன் கார்டு ஆகியவை அடிப்படைத் தேவை.  

 இருளர்கள் என்பதாலோ என்னவோ இவர்களின் கோரிக்கை வெளிச்சத்துக்கு வருவதேயில்லை. இருளர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றுவாரா மாவட்ட ஆட்சியர் என்பதுதான் இம் மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.