2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி ஹார்திக் பாண்டியாவுக்கு சிறப்பானது; ஏன்?

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தனக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கப் போவதாக இந்திய அணியின் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

News image
ஹார்திக் பாண்டியா- படம் | பிசிசிஐ
Updated On :7 ஜூன் 2024, 10:29 am

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தனக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கப் போவதாக இந்திய அணியின் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்திய அணி வெற்றியுடனும், பாகிஸ்தான் தோல்வியுடனும் தொடங்கியுள்ளது. இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான தனது முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால், பாகிஸ்தான் அணி அமெரிக்காவுக்கு எதிரான அதன் முதல் போட்டியில் சூப்பர் ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த சூழல்களுக்கு நடுவே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை மறுநாள் (ஜூன் 9) நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தனக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கப் போவதாக இந்திய அணியின் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹார்திக் பாண்டியா பேசியதாவது: மிகப் பெரிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது எனக்கு உற்சாகமளிப்பதாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி எனக்கு மேலும் சிறப்பானதாக அமைந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் நான் சிறப்பாக செயல்பட்டுள்ளேன். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி சண்டையல்ல. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி வரலாற்றில் இடம்பெறப் போகிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்களிடம் அதிக உற்சாகம் இருக்கும். பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால், அந்த நாள் இந்திய அணிக்கு மற்றுமொரு சிறப்பான நாளாக அமையும் என்றார்.

பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை ஹார்திக் பாண்டியா 6 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த 6 போட்டிகளில் பேட்டிங்கைக் காட்டிலும், பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்த 6 போட்டிகளில் பாண்டியா 84 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். அவரது எகானமி 7.5 ஆக உள்ளது. இந்த 6 போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சு 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.