2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் குறித்து மனம் திறந்த ஹார்திக் பாண்டியா!

ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசை டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படும் என நம்புவதாக ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

News image
ஹார்திக் பாண்டியா- படம் | பிசிசிஐ
Updated On :6 ஜூன் 2024, 2:40 pm

DIN

ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசை டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படும் என நம்புவதாக ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசை டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படும் என நம்புவதாக ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் விளையாடியுள்ள போட்டிகளின் மொத்த எண்ணிக்கை 892 எனத் தெரிவிக்கப்பட்டது. மிகவும் அதிக போட்டிகளில் விளையாடியுள்ளோம். அதனால், இந்திய அணிக்கு அதிக அனுபவம் உள்ளது. அதிலும் குறிப்பாக, பந்துவீச்சில் இந்திய அணி மிகுந்த அனுபவமிக்க அணியாக உள்ளது.

உலகின் நம்பர்.1 பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா அணியில் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பந்துவீச்சில் அசத்தி வரும் முகமது சிராஜ் அணியில் இருக்கிறார். கடந்த இரண்டு உலகக் கோப்பைத் தொடர்களில் இடம்பெற்ற அர்ஷ்தீப் சிங் அணியில் இருக்கிறார். அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்கிறார்கள். டி20 உலகக் கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.