சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்? ஷகித் அஃப்ரிடி பதில்!

இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பேசியுள்ளார்.

News image
ஷகித் அஃப்ரிடி- படம் | ஐசிசி
Updated On :5 ஜூன் 2024, 1:53 pm

DIN

இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வருகிற ஜூன் 9 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் விளையாடுகிற போட்டி என்றாலே, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.

கடந்த முறை டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டபோது, இந்திய அணியின் விராட் கோலி இந்தியாவுக்கு சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தந்தார்.

இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பதற்றத்தைக் கட்டுப்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியே வெற்றி பெறும் என ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஐசிசியில் பேசியதாவது: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி சூப்பர் பௌலைப் போன்றது என அமெரிக்கர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை நான் எப்போதும் விரும்புவேன். இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி எப்போதும் மிகுந்த சவாலானதாக இருக்கும். இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது, இந்திய ரசிகர்களிடமிருந்து அதிக அளவிலான மரியாதையும் அன்பும் கிடைக்கும்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடும்போது அழுத்தமான சூழலை கையாளத் தெரிவது என்பது வெற்றியைத் தீர்மானிக்கும். இரண்டு அணிகளிலும் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். பதற்றமின்றி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்கள் அன்றைய நாளின் வெற்றியாளர்களாக மாறுவார்கள். டி20 போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் எனக் கூறுவது கடினம். 8-வது இடத்தில் களமிறங்கும் வீரர்களும் 150 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி போட்டியை வென்று கொடுக்கிறார்கள். பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.