2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விமர்சனங்களை எதிர்கொள்ளாத எவரும் வெற்றியைப் பெற முடியாது: பாக். வீரர்!

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தங்களது அணியின் மீதான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார்.

News image
பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான்.
Updated On :4 ஜூலை 2024, 11:46 am

DIN

நடந்துமுடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வென்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்குக்கூட தேர்வாகாமல் வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் உள்பட அந்நாட்டு ரசிகள் மிகுந்த வேதனை அடைந்தார்கள்.

பாகிஸ்தான் அணியை சரமாரியாக விமர்சித்தார்கள். இந்த அணியை கலைத்துவிட வேண்டுமென கூறினார்கள்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வரும் சனிக்கிழமை வெள்ளைப் பந்து அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டியன், மூத்த அணியின் மேலாளர் வாஹாப் ரியாஸ் ஆகியோர் உடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக இருக்கிறது.

இந்தக் கூடத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் நடக்காமல் அதே மாதிரியான வீரர்களாக அணியில் எடுக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர்- பேட்டரான முகமது ரிஸ்வான் பேட்டி வைரலாகி வருகிறது. முகமது ரிஸ்வான் கூறியதாவது:

எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாங்கள் இப்படி மோசமாக விளையாடியதால் இந்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ளாத எவரும் வெற்றியை பெற முடியாது.

இந்த டி20 உலகக் கோப்பையில் எங்களது செயல்பாடுகள் வருத்தமளிக்கின்றன. இந்தத் தோல்விக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு அணி தோல்வியிறும்போது, ஒருவர் பேட்டிங் அல்லது பௌலிங் மட்டும் நன்றாக விளையாடியதாக சொல்ல முடியாது.

ஒரு மனிதருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அறுவைச் சிகிச்சை சாதாரணமானது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குநர் கடின உழைப்பாளி. அவர்தான் அணியில் யார் இருக்க வேண்டும் யார் இருக்கக்கூடாது என்பதை முடிவெடுக்கிறார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.