தெற்காசிய கோப்பைக்கான (சாஃப்) யு20 கால்பந்து போட்டி அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-பூடான் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.
மாலத்தீவு தலைநகா் மாலேயில் நடைபெறும் இப்போட்டியில் அரையிறுதிக்குதேசம்-நேபாளம், இந்தியா=பூடான் அணிகள் தகுதி பெற்றன.
நடப்பு சாம்பியன் இந்திய அணி மீண்டும் பட்டம் வெல்லும் முனைப்பில் தீவிரமாக ஆடி வருகிறது. கடைசி குரூப் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் டிரா கண்டு அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 3 நாள்கள் ஓய்வுக்குபின் புதன்கிழமை பூடான் அணியை சந்திக்கிறது.
இதுதொடா்பாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளா் மகேஷ் காவ்லி கூறியது: கடினமான தருணங்களில் இந்திய சிறுவா்கள் சிறப்பாக ஆடி வருகின்றனா். நெருக்கடியான நேரத்தில் பொறுப்பாக ஆடி வருகின்றனா். கோல் போடும் வாய்ப்புகளை உருவாக்கி தவறாமல் கோலாக்க வேண்டும். பூடானை எளிதாக கருதவில்லை என்றாா்.
பூடான் அணி குரூப் ஏ பிரிவில் நேபாளத்தை வீழ்த்தியது. மாலத்தீவுடன் கோலின்றி டிரா கண்டது. அரையிறுதியில் ஆட்டநேர முடிவில் சமநிலை ஏற்பட்டால் கூடுதல் நேரம் இல்லாமல் நேரடியாக பெனால்டி கடைப்பிடிக்கப்படும்.

தொடர்புடையது

ஏஎஃப்சி யு20 ஆசியக் கோப்பை கால்பந்து: சீன தைபேயை வீழ்த்தியது இந்தியா

சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்

3 ஆண்டுகளாக நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதிப் போட்டிகள்: 48 அணிகள், 12 குழுக்களாகப் பிரிப்பு!

ஏஎஃப்சி கால்பந்து: ஹாங்காங்கை வீழ்த்தியது இந்தியா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


