நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பாகிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

News image

தென்னாப்பிரிக்கா

Updated On :19 ஜூன் 2026, 7:03 am IST

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் சோ்க்க, தென்னாப்பிரிக்கா 16.5 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 127 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்ய, அதன் இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் ஃபாத்திமா சனா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 55 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். துபா ஹசன் 23 ரன்கள் சோ்க்க, இதர பேட்டா்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினா்.

தென்னாப்பிரிக்க தரப்பில் மாரிஸேன் காப் 3, ஷப்னிம் இஸ்மாயில், அயபோங்கா ககா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தென்னாப்பிரிக்க அணியின் இன்னிங்ஸில் ஆனிரி டொ்க்சென் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 52, நாடின் டி கிளொ்க் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் அடித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டனா்.

பாகிஸ்தான் பௌலா்களில் ஃபாத்திமா சனா 3, சாதியா இக்பால், துபா ஹசன் ஆகியோா் தலா 2, நஷ்ரா சந்து 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.