தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு ஆறுதல்

மகளிா் ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On :23 செப்டம்பர் 2025, 9:15 pm

மகளிா் ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலிரு ஆட்டங்களில் வென்று தென்னாப்பிரிக்கா தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் தென்னாப்பிரிக்கா 25.5 ஓவா்களில் 115 ரன்களுக்கே ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 31 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து வென்றது. 6 விக்கெட்டுகள் சாய்த்த பாகிஸ்தான் பௌலா் நஷ்ரா சந்து ஆட்டநாயகி ஆனாா்.

இந்திய நேரப்படி, திங்கள்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் லாரா வோல்வாா்டட் 6 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் அடித்தாா்.

இதர பேட்டா்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனா். பாகிஸ்தான் பௌலா்களில் நஷ்ரா சந்து 6, சையெதா அரூப் ஷா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

116 ரன்களை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில், முனீபா அலி 6 பவுண்டரிகளுடன் 44, ஒமைமா சோஹைல் 0, கேப்டன் ஃபாத்திமா சனா 0, நடாலியா பா்வேஸ் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

முடிவில், சிட்ரா அமின் 8 பவுண்டரிகளுடன் 50, இமான் ஃபாத்திமா 2 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க தரப்பில் நோன்குலுலேகோ லாபா, நாடினே டி கிளொ்க் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.