லக்ஷயா, பிரணய் முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், ஹெச்.எஸ்.பிரணய் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், ஹெச்.எஸ்.பிரணய் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
By தினமணி செய்திச் சேவை
Sasikumar
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், ஹெச்.எஸ்.பிரணய் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
ஆடவர் ஒற்றையரில், லக்ஷயா சென் 21-17, 21-13 என்ற வகையில், சீன தைபேவின் சு லி யாங்கை வென்றார்.
தருண் மன்னெபள்ளி 21-13, 17-21, 21-19 என்ற கணக்கில், டென்மார்க்கின் மேக்னஸ் ஜோஹன்னசனை வீழ்த்த, கே.ஸ்ரீகாந்த் 21-19, 19-21, 21-15 என்ற கேம்களில் சீன தைபேவின் லீ சியா ஹாவை வெளியேற்றினார்.
ஹெச்.எஸ்.பிரணய் 6-21, 21-12, 21-17 என்ற வகையில், இந்தோனேசியாவின் யோஹனிஸ் மார்செலினோவை வென்றார். ஆயுஷ் ஷெட்டி 21-11, 21-15 என்ற கேம்களில் கனடாவின் சாம் யுவானை சாய்த்தார். எனினும், கிரண் ஜார்ஜ் 21-11, 22-24, 17-21 என்ற கேம்களில், ஜப்பானின் கென்டா நிஷிமோடோவிடம் தோல்வி கண்டார்.
கலப்பு இரட்டையரில், மோஹித் ஜக்லன், லக்ஷிதா ஜக்லன் இணை தோல்வியைத் தழுவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது