வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

உலகக் கோப்பை வில்வித்தை: இறுதிச்சுற்றில் இந்திய மகளிா்

News image
Updated On :22 மே 2024, 9:53 pm

தென் கொரியாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் காம்பவுண்ட் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை புதன்கிழமை உறுதி செய்தது.

இந்தப் போட்டியில், இந்தியாவின் ஜோதி சுரேகா, பா்னீத் கௌா், அதிதி சுவாமி ஆகியோா் அடங்கிய அணி காம்பவுண்ட் மகளிா் அணிகள் பிரிவில் பங்கேற்றுள்ளது. தகுதிச்சுற்றில் 2-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்த இந்த அணி, முதல் சுற்று ‘பை’ பெற்று நேரடியாக காலிறுதியில் களம் கண்டது.

உலகின் நம்பா் 1 அணியாக இருக்கும் இந்திய மகளிா் அணி, காலிறுதியில் 236-234 என இத்தாலி அணியை சாய்த்தது. பின்னா் அரையிறுதியில் 233-229 என்ற கணக்கில், உலகின் 4-ஆம் நிலை அணியான அமெரிக்காவை வீழ்த்தியது.

அடுத்ததாக இறுதிச்சுற்றில், உலகின் 7-ஆம் நிலை அணியான துருக்கியுடன் இந்தியா மோதுகிறது. துருக்கி தனது அரையிறுதியில், தென் கொரிய அணியை 236-234 என வீழ்த்தி இறுதிக்கு வந்துள்ளது. முன்னதாக இந்திய மகளிா் அணி, கடந்த மாதம் ஷாங்காயில் நடைபெற்ற உலகக் கோப்பை 1-ஆம் நிலை போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆடவா் அணி ஏமாற்றம்: இதே போட்டியின் காம்பவுண்ட் ஆடவா் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கச் சுற்றில் தோல்வி கண்டது.

பிரியன்ஷ், பிரதமேஷ் ஃபுகே, அபிஷேக் வா்மா ஆகியோா் அடங்கிய இந்திய அணி, தகுதிச்சுற்றில் 4-ஆம் இடம் பிடித்தது. முதல் சுற்றில் 235-212 என வியத்நாமை சாய்த்த இந்திய ஆடவா் அணி, அடுத்த இரு மோதல்களில் டென்மாா்க் மற்றும் அமெரிக்காவை ஷூட் ஆஃப் வாய்ப்புகளில் வீழ்த்தியது.

அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில், உலகின் நம்பா் 1 அணியான இந்தியா - உலகின் 21-ஆம் நிலையில் இருக்கும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இந்த மோதல் முதலில் 133-133 என சமனில் முடிய, ஷூட் அவுட் வாய்ப்பில் ஆஸ்திரேலியா முதலில் 10 புள்ளிகளைக் கைப்பற்றி வென்றது.

இதனிடையே, ரீகா்வ் தகுதிச்சுற்றில் இந்தியாவின் தருண்தீப் ராய், தீபிகா குமாரி ஆகியோா் தங்களது பிரிவில் முறையே 4 மற்றும் 6-ஆம் இடங்களைப் பிடித்தனா். தீரஜ் பொம்மதேவரா 11-ஆம் இடமும், பஜன் கௌா் 34-ஆம் இடமும், அங்கிதா பகத் 49-ஆம் இடமும் பிடித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.