தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

செய்திகள் சில வரிகளில்...

எஸ்டோனிய பேட்டர் சஹில் செளஹான் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்து சாதனை

News image
Updated On :18 ஜூன் 2024, 10:48 pm

சைப்பரஸýக்கு எதிரான டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் எஸ்டோனிய பேட்டர் சஹில் செளஹான் 27 பந்துகளில் சதமடித்து (5 பவுண்டரிகள், 13 சிக்ஸர்கள்), டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்தவராக சாதனை படைத்தார். மொத்தமாக 41 பந்துகளில் 6 பவுண்டரிகள், 18 சிக்ஸர்கள் விளாசி 144 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த அவர், டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (18) அடித்தவராகவும் சாதனை படைத்தார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் இடையேயான 2}ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் பெங்களூரில் புதன்கிழமை நடைபெறுகிறது. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா பேட்டர்கள் வரிசையில் 2 இடங்கள் முன்னேறி 3}ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய கோல்ஃப் வீரர்களான சுபாங்கர் சர்மா, ககன்ஜீத் புல்லார் ஆகியோர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றனர். இருவருக்குமே இது முதல் ஒலிம்பிக் போட்டியாகும். சர்வதேச கோல்ஃப் சம்மேளனம் வெளியிட்ட ரேங்கிங் பட்டியல் அடிப்படையில் அவர்கள் தகுதிபெற்றுள்ளனர். இதிலேயே மகளிர் பிரிவு தரவரிசை வரும் 24}ஆம் தேதி வெளியாகும்போது, இந்தியாவின் அதிதி அசோக், தீக்ஷா தாகர் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கால்பந்து அணிக்கான பயிற்சியாளர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும், நீண்டகால கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு பெற்றதால் அணியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதெ மிகப்பெரிய சவால் என்றும் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் ஐ.எம். விஜயன் தெரிவித்தார்.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்காக முன்னாள் வீரர்கள் கெளதம் கம்பீர், டபிள்யூ.வி. ராமன் ஆகியோரிடம், பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழு செவ்வாய்க்கிழமை நேர்காணல் நடத்தியுள்ளது. இதில் கம்பீர் அந்தப் பொறுப்புக்கு தேர்வாக இருப்பதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.