ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

இந்திய அணியை உருவாக்கிய லெஜண்ட் ஜெய் ஷா: பிரகாஷ் ராஜ் கிண்டல்

ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய் ஷாவை பிரகாஷ் ராஜ் விமர்சித்தது பற்றி...

News image

ஜெய் ஷா(கோப்புப்படம்) - ANI

Updated On :29 ஆகஸ்ட் 2024, 7:15 am

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனும், பிசிசிஐ தலைவருமான ஜெய் ஷாவை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஜெய் ஷாவை வாழ்த்தி பதிவிட்ட எக்ஸ் பதிவை பகிர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் என்று பிரகாஷ் ராஜ் கேலி செய்துள்ளார்.

தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின்(பிசிசிஐ) செயலாளராக உள்ள ஜெய் ஷா, ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலர், ஜெய் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட எக்ஸ் பதிவை பகிர்ந்து, நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டதாவது:

“பேட்டராக, பவுலராக, விக்கெட் கீப்பராக மற்றும் தலைசிறந்த ஆல்ரவுண்டராக இந்திய அணியை உருவாக்கிய லெஜண்ட் ஜெய் ஷா. அவர் ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கு நாம் அனைவரும் எழுந்து நின்று கைதட்டுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரகாஷ் ராஜின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட் செய்துள்ள ஜெய் ஷாவின் ஆதரவாளர்கள், கிரிக்கெட்டுக்கு தொடர்பில்லாத சரத் பவார், ராஜீவ் சுக்லா, பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோரும் கிரிக்கெட் சங்கங்களின் பதவிகளில் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.