சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ரோஹித் சர்மா, விராட் கோலியை துலிப் கோப்பையில் விளையாட வலியுறுத்தக் கூடாது: ஜெய் ஷா

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களை துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வலிறுத்தக் கூடாது என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

News image
ரோஹித் சர்மா - விராட் கோலி (கோப்புப் படம்)
Updated On :15 ஆகஸ்ட் 2024, 3:37 pm

DIN

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களை துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வலிறுத்தக் கூடாது என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

துலிப் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் ஆந்திரம் மற்றும் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், காயம் ஏற்படும் அபாயம் இருப்பதால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களை துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வலிறுத்தக் கூடாது என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஜெய் ஷா

ஜெய் ஷா

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களை துலிப் கோப்பையில் விளையாட வலியுறுத்தக் கூடாது. அவர்களுக்கு காயம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற அணிகளில் உள்ள சர்வதேச அளவிலான வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில்லை.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களை நாம் மதிப்புடன் நடத்த வேண்டியுள்ளது. சில மூத்த வீரர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் துலிப் கோப்பையில் விளையாடுகின்றனர். ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் மூவரும் புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றனர். அதனை நாம் பாராட்ட வேண்டும் என்றார்.

இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் துலிப் கோப்பையில் விளையாடவில்லை. ரோஹித் சர்மா கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு துலிப் கோப்பையில் விளையாடியிருந்தார். விராட் கோலி கடந்த 2010 ஆம் ஆண்டு கடைசியாக துலிப் கோப்பையில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.