பும்ரா குறித்து ராகுல் டிராவிட் கூறியதாவது: “ நாங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இருந்து பும்ரா முழுவதுமாக விலகியுள்ளது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதனால், அடுத்த சில நாட்களுக்கு நாங்கள் காத்திருந்து அவரது உடல் நிலை குறித்து கவனிக்க உள்ளோம். சாதாரணமாக வீரர் ஒருவர் முதுகில் காயத்தினால் அவதிப்படும்போது அதிலிருந்து குணமடைந்து திரும்ப 6 மாதங்கள் தேவைப்படும். இருப்பினும், பும்ரா குணமடைந்து அணிக்கு விரைவில் திரும்புவார் என நம்புகிறோம். நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் அவரது காயம் எந்த அளவிற்கு உள்ளது என்பது தெரியவில்லை. நாங்கள் எப்போதும் அவரது சிறப்பான பங்களிப்பை அணிக்குத் தர வேண்டும் என விரும்புகிறோம்.” என்றார்.