எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று: நடுவர்களை அறிவித்தது ஐசிசி

டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் பணியாற்றவுள்ள நடுவர்களை அறிவித்தது ஐசிசி.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:49 am

IANS

டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் பணியாற்றவுள்ள நடுவர்களை அறிவித்தது ஐசிசி.

டி20 உலகக் கோப்பைப் போட்டி அரையிறுதிச்சுற்று ஆட்டங்களில் இந்தியாவை இங்கிலாந்தும் நியூசிலாந்தை பாகிஸ்தானும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஞாயிறன்று மெல்போர்னில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டி இறுதிச்சுற்றில் பணியாற்றவுள்ள நடுவர்களை இன்று அறிவித்தது ஐசிசி. மரைஸ் எராஸ்மஸ் மற்றும் குமார் தர்மசேனா ஆகிய இருவரும் கள நடுவர்களாகப் பணியாற்றவுள்ளார்கள். 3-வது நடுவராக கிறிஸ் கஃபானியும் 4-வது நடுவராக பால் ரீஃபிலும் பணியாற்றவுள்ளார்கள். ரஞ்சன் மடுகலே போட்டி நடுவராக இருப்பார். 

இதற்கு முன்பு , இங்கிலாந்து அணி 2010 டி20 உலகக் கோப்பைப் போட்டியையும் பாகிஸ்தான் அணி 2009 டி20 உலகக் கோப்பைப் போட்டியையும் வென்றுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.