நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வா?: ஆஸி. கேப்டன் பதில்

டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்த கேள்விக்கு ஆஸ்திரேலிய டி20 கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பதிலளித்துள்ளார்.

News image
Updated On :7 நவம்பர் 2022, 10:28 am

டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்த கேள்விக்கு ஆஸ்திரேலிய டி20 கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பதிலளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சொந்த மண்ணில் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது ஆஸ்திரேலிய அணி. நடப்பு சாம்பியனாக இருந்தும் 5 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்று 3-ம் இடம் பிடித்ததால் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. 

ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக இருந்த ஆரோன் ஃபிஞ்ச், கடந்த செப்டம்பர் மாதம் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலிய அணி அடுத்த ஆகஸ்ட் மாதம் வரை எந்தவொரு டி20 ஆட்டத்திலும் விளையாட வேண்டியதில்லை. 9 மாதங்கள் கழித்து 2023 ஆகஸ்டில் தென்னாப்பிரிக்காவில் டி20 தொடரில் விளையாடவுள்ளது ஆஸி. அணி. 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாததால் கேப்டன் பதவியிலிருந்து ஆரோன் ஃபிஞ்ச் விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஒரு பேட்டியில் ஃபிஞ்ச் கூறியதாவது:

இல்லை. டி20 கிரிக்கெட்டிலிருந்து தற்போது நான் ஓய்வு பெறப்போவதில்லை. பிபிஎல் போட்டியில் விளையாடுவேன். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதில் இன்னமும் ஆர்வமாக உள்ளேன் என்று கூறியுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் காயம் காரணமாக ஆஸி. அணியின் கடைசி ஆட்டத்தில் ஆரோன் ஃபிஞ்ச் விளையாடவில்லை.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.