டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ராகுல், சூர்யகுமார் அதிரடி: ஜிம்பாப்வேக்கு 187 ரன்கள் இலக்கு!

ஜிம்பாப்வே அணிக்கு அதிராக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 186 ரன்களை குவித்தது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:46 am

DIN

ஜிம்பாப்வே அணிக்கு அதிராக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 186 ரன்களை குவித்தது. 

சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இந்திய அணி நேரடியாக அரையிறுதிக்கு தேர்வாகியது. தற்போது இந்த போட்டியில் தோற்றாலும் இந்தியாவுக்கு பாதிப்பில்லை. இந்நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அணியில் ஒரு மாற்றம். தினேஷ் கார்த்திக் பதிலாக ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். 

Story image

கே.எல்.ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி இருவரும் அரைசதம் அடித்தனர். ராகுல் 35 பந்துகளில் 51 ரன்களும், சூர்யா 25 பந்துகளில் 57 ரன்களை எடுத்தார். இதில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும். ரோஹித் 15 ரன்கள், கோலி 26 ரன்கள், ரிஷப் பந்த் 3 ரன்கள், ஹார்திக் பாண்டியா 18 ரன்களும் எடுத்தனர். 

20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.