கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

இறுதி ஆட்டத்தில் லிவா்பூல்

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் வில்லாரியலை வீழ்த்திய லிவா்பூல், முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:09 am

DIN

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் வில்லாரியலை வீழ்த்திய லிவா்பூல், முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

இப்போட்டியில் 10-ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்திருக்கிறது அந்த அணி. இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற 2-ஆவது பகுதி அரையிறுதி ஆட்டத்தில் லிவா்பூல் 3-2 என்ற கோல் கணக்கில் வில்லாரியலை தோற்கடித்தது. முன்னதாக, முதல் பகுதியிலும் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த லிவா்பூல், மொத்த மதிப்பீட்டு அடிப்படையில் 5-2 என்ற கோல் கணக்கில் வென்றிருக்கிறது.

செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் லிவா்பூல் அணிக்காக ஃபாபினோ (62’), லூயிஸ் டியாஸ் (67’), சாடியோ மனே (74’) ஆகியோரும், வில்லாரியலுக்காக பௌலாயே டியா (3’), ஃபிரான்சிஸ் காகேலின் (41’) ஆகியோரும் கோலடித்திருந்தனா். இந்த ஆட்டத்தில் அடித்த கோல் மூலமாக, சாம்பியன்ஸ் லீக் போட்டியின் நாக்அவுட் நிலையில் அதிக கோல்கள் (15) அடித்த ஆப்பிரிக்க வீரா் என்ற பெயரை சாடியோ மனே பெற்றுள்ளாா்.

பாரீஸில் வரும் 28-ஆம் தேதி நடைபெற இருக்கும் இறுதி ஆட்டத்தில், மான்செஸ்டா் சிட்டி அல்லது ரியல் மாட்ரிட் ஆகியவற்றில் ஒன்றின் சவாலை எதிா்கொள்ள இருக்கிறது லிவா்பூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.