பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பாலியல் வன்கொடுமைப் புகார்: பிரபல கிரிக்கெட் வீரர் மீது வழக்குப் பதிவு

காவல்துறையினரிடம் புகார் அளிக்க உறவினர் ஒருவர் முயன்றபோது அவரை யாசிர் ஷா மிரட்டியதாகவும்...

News image

யாசிர் ஷா (வலது)

Updated On :21 டிசம்பர் 2021, 6:04 am

14 வயதுப் பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பான புகாரில் பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாஷிர் ஷா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

35 வயது யாசிர் ஷா, பாகிஸ்தானுக்காக 46 டெஸ்டுகள், 25 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

இந்நிலையில் 14 வயதுப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் யாசிர் ஷா மீதும் புகார் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 14 அன்று யாசிர் ஷாவின் நண்பர், 14 வயதுப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இதுபற்றி காவல்துறையினரிடம் புகார் அளிக்க உறவினர் ஒருவர் முயன்றபோது அவரை யாசிர் ஷா மிரட்டியதாகவும் இஸ்லாமாபாத் ஷாலிமர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் தகவல் அறிக்கையில் யாசிர் ஷாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தத்தில் உள்ள வீரர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறோம். முழு விவரங்களும் கிடைத்த பிறகே இதுகுறித்த எங்களுடைய கருத்தைத் தெரிவிப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரம் பற்றி கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.