தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஐபிஎல் காத்திருக்கட்டும்: ரோஹித் சர்மா

நிலைமை சரியாகும் வரை ஐபிஎல் போட்டி காத்திருக்கட்டும் என்று பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா கூறியுள்ளார்...

News image
Updated On :27 மார்ச் 2020, 9:07 am

நிலைமை சரியாகும் வரை ஐபிஎல் போட்டி காத்திருக்கட்டும் என்று பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 24,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 700 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாா்ச் 29-ஆம் தேதி தொடங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள், கரோனா பாதிப்பாலும், மத்திய அரசின் உத்தரவாலும், ஏப். 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் போட்டிகள் நடத்துவது குறித்து நிலைமையை கணித்து முடிவெடுக்கப்படும் என பிசிசிஐ தலைவா் கங்குலி தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில் ஓய்வில் இருக்கும் கிரிக்கெட் வீரரான ரோஹித் சர்மா, மற்றொரு இந்திய வீரர் சஹாலிடம் இன்ஸ்டகிராமில் உரையாடினார். அப்போது ரோஹித்திடம் ஐபிஎல் குறித்து கேள்வி எழுப்பினார் சஹால்.

நாம் முதலில் நாட்டைப் பற்றித்தான் யோசிக்கவேண்டும். நிலைமை சரியான பிறகுதான் ஐபிஎல் பற்றி பேசமுடியும். முதலில் அனைவருடைய வாழ்க்கையும் சகஜ நிலைமைக்குத் திரும்பட்டும்.

ஊரடங்கு உத்தரவால் மும்பையே காலியாக உள்ளது. இதுபோல நான் பார்த்ததில்லை. ஒரு கிரிக்கெட் வீரராக குடும்பத்தினரிடம் அதிக நேரம் செலவழிக்க முடியாது. எனவே அவர்களிடம் அதிக நேரம் செலவிட்டு உரையாட இதுதான் சரியான தருணம் என்று கூறியுள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.