தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்தியா - தென் ஆப்பிரிக்கா: முதல் ஒருநாள் ஆட்டம் கைவிடப்பட்டது

ஹிமாசலப் பிரேதச மாநிலம், தா்மசாலாவில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 

News image
Updated On :12 மார்ச் 2020, 12:04 pm

ஹிமாசலப் பிரேதச மாநிலம், தா்மசாலாவில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. முதல் ஆட்டம் தா்மசாலாவிலும், இரண்டாவது ஆட்டம் உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவிலும், மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளது.

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், குவின்டன் டி காக் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவும் முதல் ஆட்டத்தில் மோதுவதற்கு மும்முரமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்கள். நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரையும், டெஸ்ட் தொடரையும் பறிகொடுத்த சோகத்தில் இருக்கும் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தோல்விப் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

எனினும் மழையால் இன்றைய ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் நிகழ்வும் நடைபெறவில்லை. மைதானத்தில் ஆடுகளத்தில் மழைநீா் புகாமல் இருக்க பணியாளா்கள் உறைகளால் மூடினா். தொடா்ந்து மழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கடைசியில் ஆட்டத்தை நடத்த ஆடுகளமும் மைதானமும் ஏதுவாக இல்லாததால் முதல் ஒருநாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவா்கள் அறிவித்தனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.