தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஐஎஸ்எல் இறுதிச்சுற்று ஆட்டத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :12 மார்ச் 2020, 12:12 pm

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஐஎஸ்எல் இறுதிச்சுற்று ஆட்டத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸால், உலகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி 4,379-ஆக உயா்ந்துள்ளது. இந்தியா, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட 115 நாடுகளில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 40,524 பேரையும் சோ்த்து, சா்வதேச அளவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 1,21,312-ஆக உயா்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. விளையாட்டு மைதானங்களுக்கு ரசிகா்கள் ஏப்ரல் மாதம் வரை வருவதை தவிா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரும் 14-ஆம் தேதி கோவாவில் நடைபெறவுள்ள ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதி ஆட்டத்தில் சென்னை அணியுடன் மோதுகிறது கொல்கத்தா.

ஐஎஸ்எல் 6-ஆவது சீசன் போட்டியில் சென்னையின் எஃப்சி-எஃப்சி கோவா அணிகள் ஒரு அரையிறுதியிலும், நடப்பு சாம்பியன் பெங்களூரு எஃப்சி-ஏடிகே கொல்கத்தா அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் மோதின. இரு கட்டங்களாக அரையிறுதி ஆட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் அதிக கோல் சராசரி அடிப்படையில் வென்ற அணிகள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றன. 

சென்னையில் நடைபெற்ற முதல் கட்ட அரையிறுதியில் கோவா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை. இரண்டாம் கட்ட அரையிறுதி ஆட்டம் கோவாவில் சனிக்கிழமை இரவு இரு அணிகள் இடையே நடைபெற்றது. 6-5 என்ற கோல் சராசரி அடிப்படையில் சென்னையின் அணி இறுதிச் சுற்றில் நுழைந்தது.

பெங்களூருவில் நடைபெற்ற முதல் கட்ட அரையிறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது பெங்களூரு.  அடுத்த ஆட்டத்தில், பெங்களூருவை 3-2 என்ற கோல் சராசரி அடிப்படையில் வீழ்த்தி இறுதிச் சுற்றில் நுழைந்தது கொல்கத்தா (ஏடிகே) அணி. இரண்டாம் கட்ட அரையிறுதி கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவாவில் சனியன்று (மார்ச் 14) நடைபெறவுள்ள ஐஎஸ்எல் இறுதிச்சுற்று ஆட்டத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் யாருமில்லா மைதானத்தில் சென்னை - கொல்கத்தா ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார், ஜியோ டிவி ஆகியவற்றில் நேரலையாகக் காணமுடியும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.