மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

ஒருநாள் தொடர்: ரிஷப் பந்தை நீக்கிவிட்டு விக்கெட் கீப்பராகிறாரா கே.எல். ராகுல்?

இப்போதைக்கு ரிஷப் பந்த் தான் எங்களுடைய முதன்மையான விக்கெட் கீப்பர்...

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:28 pm

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. 

இந்நிலையில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஷிகர் தவன் ஆகிய மூவரும் விளையாட விளையாட வாய்ப்புள்ளதாக கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இதனால் இந்திய அணியில் சில மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிகிறது. இந்திய அணியில் ஜடேஜா, ஜாதவ் ஆகிய இருவரும் கடைசி ஓவர்களில் பேட்டிங் செய்ய தேவைப்படுவதால் ரிஷப் பந்த் நீக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.எல். ராகுலை விக்கெட் கீப்பராக்கிவிட்டால் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஷிகர் தவன் ஆகிய மூவரும் இந்திய அணியில் இடம்பெறமுடியும். கூடவே ஜடேஜா, ஜாதவும் அணியில் பங்கேற்று பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிக்க முடியும். இதனால் தான் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஷிகர் தவன் ஆகிய மூவரும் விளையாட விளையாட வாய்ப்புள்ளதாக கோலி பேட்டியளித்தார் என அறியப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் கூறியதாவது: ராகுலை விக்கெட் கீப்பராகவும் செயல்பட வைப்பது குறித்து நாங்கள் யோசிக்கவில்லை. இப்போதைக்கு ரிஷப் பந்த் தான் எங்களுடைய முதன்மையான விக்கெட் கீப்பர். ராகுலும் கீப்பிங் செய்ய முடியும். அணிக்குத் தேவைப்படும்போது அதைப் பயன்படுத்திக்கொள்வோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.