/

ரோஹித், தவன், ராகுல் என மூவரும் அணியில் இடம் பெற முடியும்: விராட் கோலி பேட்டி

இந்திய அணியில் ரோஹித், தவன், ராகுல் ஆகிய மூவரும் இடம்பெற முடியும் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

News image
Updated On :13 ஜனவரி 2020, 9:24 am

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. 

இந்நிலையில் இந்திய அணியில் ரோஹித், தவன், ராகுல் ஆகிய மூவரும் இடம்பெற முடியும் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஃபார்மில் உள்ள வீரர் அணிக்குத் தேவையானவர். சிறந்த வீரர்களே அணிக்குத் தேவைப்படுகிறார்கள். அவர்களிலிருந்து சூழலுக்கேற்றவாறு அணியைத் தேர்வு செய்யவேண்டும். ரோஹித், தவன், ராகுல் என மூவரும் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. மூவரும் விளையாடினால் நான் 4-ம் நிலை வீரராகவும் விளையாடத் தயார். நான் எங்கு விளையாடுகிறேன் என்பது குறித்து பிடிவாதம் பிடிப்பதில்லை. எந்த நிலையில் விளையாவேன் என்பது குறித்து எனக்கு அச்சமும் இல்லை. ஒரு கேப்டனாக அடுத்து விளையாடவுள்ள வீரர்களும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யவேண்டும். இபோது அணியைத் தயார் செய்வது மட்டுமல்லாமல் அடுத்து தலைமையேற்கிற கேப்டனிடமும் ஒப்படைக்கும்படியான அணியைத் தயார் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.