திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

2-0 என டி20 தொடரை எளிதாக வென்ற இந்தியா! (ஹைலைட்ஸ் விடியோ)

தொடர் நாயகனாக நவ்தீப் சைனியும், ஆட்ட நாயகனாக ஷர்துல் தாக்குரும் தேர்வு செய்யப்பட்டனர். 

News image
Updated On :11 ஜனவரி 2020, 5:45 am

இந்தியா - இலங்கை ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் குவாஹாட்டி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்தூரில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

தொடரைக் கைப்பற்றப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஆட்டம் புணேயில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்தியா 201/6 ரன்களை குவித்தது. ராகுல், 1 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 54 ரன்களை விளாசினார். தவன் 1 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். 4 பவுண்டரியுடன் 18 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார் மணிஷ் பாண்டே. ஷர்துல் தாக்குர் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 8 பந்துகளில் 22 ரன்களை விளாசி இந்திய அணி 200 ரன்களைத் தாண்ட முக்கியக் காரணமாக இருந்தார். இரண்டாவதாக ஆடிய இலங்கை அணி 123 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகியது. இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய நவ்தீப் சைனி 3-28, சர்துல் 2-19, வாஷிங்டன் சுந்தர் 2-37 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலங்கைக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தை 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-0 என கைப்பற்றியது இந்தியா. தொடர் நாயகனாக நவ்தீப் சைனியும், ஆட்ட நாயகனாக ஷர்துல் தாக்குரும் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.