குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

இன்றைய தேதிக்கு, பாகிஸ்தான் மிகவும் பாதுகாப்பான பகுதி: கிறிஸ் கெயில் சான்றிதழ்!

கிரிக்கெட் வீரர்களும் அணிகளும் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்ய தயங்கும் வேளையில்...

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:26 pm

எழில்

கிரிக்கெட் வீரர்களும் அணிகளும் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்ய தயங்கும் வேளையில், பாகிஸ்தான் உலகின் மிகப் பாதுகாப்பான பகுதி என சான்றிதழ் வழங்கியுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில்.

வங்கதேச பிரிமீயர் லீக் டி20 போட்டியில் விளையாடி வரும் கெயில் பேட்டியளித்ததாவது:

இன்றைய தேதிக்கு, பாகிஸ்தான் மிகவும் பாதுகாப்பான பகுதி. ஜனாதிபதிக்குரிய பாதுகாப்பு உங்களுக்குக் கிடைக்கிறது. பிறகு என்ன பிரச்னை? வங்கதேசத்திலும் பாதுகாப்பு நன்றாக உள்ளது என்று கூறியுள்ளார். 

2009-ல் பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான லாகூர் டெஸ்ட், தீவிரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. மைதானத்துக்கு இலங்கை அணி வீரர்களை அழைத்து வந்த பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டார்கள். சில வீரர்களும் நிர்வாகிகளும் காயமடைந்தார்கள். இதையடுத்து பாகிஸ்தானில் சர்வதேச ஆட்டங்கள் நடைபெறுவது தடைபட்டது. சமீபகாலமாகத்தான் டி20, ஒருநாள் ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அங்கு டெஸ்ட்  ஆட்டம் நடைபெற்றுள்ளது. ராவல்பிண்டியிலும் கராச்சியிலும் பாகிஸ்தான் - இலங்கை அணிகளின் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2-ஆவது டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது. இதையடுத்து பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் வங்கதேச அணி விளையாடவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.