திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

2020 ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று இந்த நாளில் நடைபெறும்!

2020 ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று மே 24 அன்று நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :10 ஜனவரி 2020, 6:03 am

2020 ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று மே 24 அன்று நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வருட ஐபிஎல் போட்டி மார்ச் 29 அன்று தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த வருடம் 57 நாள்களுக்கு ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. வழக்கமாக 45 நாள்களில் நடக்கும் ஐபிஎல் இந்தமுறை 12 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதிச்சுற்று மே 24 அன்று நடைபெறவுள்ளது.

மேலும், வார இறுதி நாள்களில் தினமும் இரு ஆட்டங்கள் நடைபெறுகிற நிலையில் இந்த ஆண்டு சனி, ஞாயிறில் தலா ஒரு ஆட்டம் மட்டும் தான் நடைபெறும் எனத் தெரிகிறது. மாலை நேர ஆட்டங்களுக்கு வருவதற்கு ரசிகர்கள் சிரமப்படுவதாலும் அந்த ஆட்டங்களுக்கு டிஆர்பி குறைவாக இருப்பதாலும் இந்தப் புதிய நடைமுறை இந்த வருடம் முதல் தொடரவுள்ளது. 

ஐபிஎல் 2020 போட்டி, மார்ச் 29 அன்று வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதனால் ஆரம்பத்தில் வெளிநாட்டு வீரர்கள் சிலரால் ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ள முடியாது. ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து டி20 போட்டி மார்ச் 29-ல் முடிவடைகிறது. இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர் மார்ச் 31 அன்று முடிவடைகிறது.

கடந்த வருட ஐபிஎல் போட்டியை மும்பை அணி வென்றதால், இறுதிச்சுற்று ஆட்டமும் மும்பையில் தான் நடைபெறும் எனத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.