குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

இது அவுட்டா, சிக்ஸரா?: சர்ச்சையை ஏற்படுத்திய கேட்ச்! (விடியோ)

மேட் ரென்ஷா, டாம் பாண்டன் ஆகிய இருவரும் கூட்டணி போட்டு எல்லைக்கோட்டுக்கு அருகே பிடித்த கேட்ச் கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:25 pm

எழில்

மேட் ரென்ஷா, டாம் பாண்டன் ஆகிய இருவரும் கூட்டணி போட்டு எல்லைக்கோட்டுக்கு அருகே பிடித்த கேட்ச் கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் ஆகிய அணிகளுக்கு இடையிலான பிக் பாஷ் லீக் டி20 ஆட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, பென் கட்டிங்கின் பந்தை சிக்ஸருக்கு விரட்டினார் மேத்யூ வேட். எல்லைக்கோட்டுக்கு அருகே நின்றிருந்த ரென்ஷா, பந்தைப் பிடித்தபடி நிலைதடுமாறி கோட்டுக்கு வெளியே சென்றார். அப்போது பந்தை மேலே தட்டி விட்டார். பிறகு காலை கீழே வைக்காத நிலையில் கீழே விழ இருந்த பந்தை உள்ளே தட்டிவிட, எல்லைக்கோட்டுக்கு அருகே காத்திருந்த டாம் பாண்டன் கேட்ச் பிடித்தார்.

பந்து எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்றாலும் கீழே விழவில்லை. ரென்ஷா அதை உள்ளே தட்டி விடும்போது அவருடைய கால் கீழே இல்லை. இதனால் நடுவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. கடைசியில் மூன்றாம் நடுவர், மேத்யூ வேட் ஆட்டமிழந்ததாக அறிவித்தார். 

இந்த கேட்சை அனுமதித்ததற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். எல்லைக்கோட்டுக்கு வெளியே பந்தும் வீரரும் சென்றபிறகும் இதை சிக்ஸர் என அறிவிக்காதது தவறு என்று கூறியுள்ளார்கள். ஆனால் விதிமுறைகளின்படி இது அவுட் என்பது தான் நடுவரின் இறுதி முடிவாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.