கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

கடந்த 5 டெஸ்டுகளில் 4 சதங்கள்: ஆஸி. பேட்ஸ்மேன் மார்னஸ் லபூஷேன் சாதனை

ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் சிட்னியில் இன்று தொடங்கியது.

News image
Updated On :3 ஜனவரி 2020, 5:55 am

ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் சிட்னியில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஜோ பர்ன்ஸ் 18 ரன்களிலும் வார்னர் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஜோடி சேர்ந்த மார்னஸ் லபூஷேன் - ஸ்மித் ஜோடி நியூஸிலாந்து பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டது. ஸ்மித் மிகப் பொறுமையுடன் விளையாடி 143 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்தார்.

25 வயது மார்னஸ் லபூஷேன், இதுவரை 13 டெஸ்டுகளில் விளையாடி 3 சதங்களும் 7 அரை சதங்களும் எடுத்துள்ளார். கடந்த நான்கு டெஸ்டுகளில் மூன்று சதங்கள் எடுத்து கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஸ்மித்துக்கு நல்ல இணையாக விளங்கிய லபூஷேன் 97 பந்துகளில் அரை சதமெடுத்தார். பிறகு சற்று விரைவாக விளையாடி 163 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் சதத்தை எட்டினார். இதன்மூலம் கடந்த 7 இன்னிங்ஸ்களில் 4 சதங்கள் எடுத்து அசத்தியுள்ளார் லபூஷேன். 

ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 75 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. லபூஷேன் 103, ஸ்மித் 57 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.