இந்தியா - நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 21 அன்று தொடங்கியது. முதல் டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி. இதனால் டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட், பிப்ரவரி 29 அன்று தொடங்கவுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் இந்திய வீரர் ரஹானே கூறியதாவது:
முதல் டெஸ்டில் என்ன தவறு செய்தோமோ அதை 2-வது டெஸ்டில் சரி செய்யவேண்டும். ஒரு பேட்ஸ்மேன் தற்போதைய நிலையில் கவனம் செலுத்தவேண்டும். பழசை மறக்கவேண்டும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒவ்வொரு டெஸ்டும் முக்கியமானது.
டெஸ்ட் தொடரை வெல்வது மட்டும் முக்கியமல்ல. ஏனெனில் இங்கு ஒரு டெஸ்டில் வென்றாலும் 60 புள்ளிகளை அள்ளி புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி வெகுவாக முன்னேறிவிடும். அதனால் தான் சொல்கிறேன். முதல் டெஸ்டில் நடந்ததை மறந்துவிடுங்கள். ஆனால் அதில் செய்த தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு 2-வது டெஸ்டில் கவனம் செலுத்தவேண்டும்.
2-வது டெஸ்டுக்கான ஆடுகளம், பேட்டிங்குக்கு ஏற்றவாறு, ஷாட்களை அடிக்கும் விதத்தில் அமையும். ஆடுகளம் மற்றும் சூழலை எப்போதும் எண்ணிக்கொண்டிருக்க முடியாது. ஒருகட்டத்தில் அவற்றைத் தாண்டிச் சென்று எப்படி ரன் எடுக்கவேண்டும் என்று பார்க்கவேண்டும். இந்திய ஏ அணியினர் அதிகாரபூர்வமற்ற டெஸ்டைக் கடந்த மாதம் இங்கு ஆடினார்கள். இந்த ஆடுகளம், முதல் டெஸ்டில் பார்த்ததை விடவும் நன்றாக இருப்பதாக அந்த ஆட்டத்தில் இடம்பெற்ற விஹாரி கூறினார். முதல் நாளிலேயே ஆடுகளம் பற்றி அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு விளையாடவேண்டும்.
அஸ்வின், ஜடேஜா இருவரில் யார் விளையாடுவார்கள் எனக் கேட்கிறீர்கள். இருவருமே தரமான பந்துவீச்சாளர்கள். ஆடுகளத்தைப் பார்த்தபிறகே கேப்டன் இதுகுறித்து முடிவு செய்வார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்

பெண்கள் கருத்தரிக்க உதவும் 10 உணவுகள்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


