தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஐபிஎல் போட்டிக்கு முன்பு வங்கதேசத்தில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடும் இந்திய வீரர்கள்!

ஐபிஎல் போட்டிக்கு முன்பு வங்கதேசத்தில் நடைபெறவுள்ள இரு டி20 ஆட்டங்களில் இந்திய வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:59 pm

எழில்


ஐபிஎல் போட்டிக்கு முன்பு வங்கதேசத்தில் நடைபெறவுள்ள இரு டி20 ஆட்டங்களில் இந்திய வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

வங்கதேசத்தின் முதல் அதிபரான ஷேக் முஜிபுர் ரஹ்மான், 1920-ல் கிழக்கு வங்கப் பகுதியின் டோங்கிபுரா கிராமத்தில் பிறந்தவர். 1971-ல் வங்கதேசம் உருவானபோது புதிய தேசத்தின் முதல் அதிபராகப் பொறுப்பேற்றார். இதற்குப் பிறகு பிரதமராகவும் பணியாற்றியுள்ளார். வங்காளிகளால் வங்கபந்து (வங்காளிகளின் நண்பர்) என்றழைக்கப்பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது வங்கதேசம். இதன் ஒரு பகுதியாக பிரபல கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் இரு டி20 ஆட்டங்கள் தாக்காவில் நடைபெறவுள்ளன.

ஆசியா லெவன், உலக லெவன் என இரு அணிகள் மோதவுள்ள டி20 ஆட்டங்களுக்கான அணி விவரங்களின் வெளியிடப்பட்டுள்ளன. வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹாசன் இத்தகவலை தெரிவித்துள்ளார். உலக லெவன் அணியில் கிறிஸ் கெயில், ரஷித் கான், ஜானி பேர்ஸ்டோவ் போன்ற பிரபல வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஆசிய லெவன் அணியில் விராட் கோலி, ஷிகர் தவன், கே.எல். ராகுல், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், ஷமி ஆகிய ஐந்து வீரர்கள் பங்கேற்கிறார்கள். பிஎஸ்எல் டி20 போட்டி நடைபெறுவதால் பாகிஸ்தான் வீரர்கள் எந்த அணியிலும் இடம்பெறவில்லை. கோலியும் ராகுலும் இரு ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மட்டும் விளையாட சம்மதித்துள்ளார்கள். 

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், மார்ச் 4-ல் முடிவடைகிறது. பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஒருநாள் தொடர் இந்தியாவில் மார்ச் 12-ல் தொடங்கி மார்ச் 18-ல் முடிவடைகிறது. தாக்காவில் நடைபெறவுள்ள இரு டி20 ஆட்டங்களும் மார்ச் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. ஐபிஎல் போட்டி மார்ச் 29 அன்று தொடங்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.