முதல் 4 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்தது இந்திய மகளிர் அணி. மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு இதைவிடவும் ஒரு நல்ல தொடக்கம் கிடைக்குமா?
அதன்பிறகு இந்தத் தொடக்கத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது இந்திய மகளிர் அணி.
சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாா்பில் இன்று தொடங்கியுள்ள மகளிா் டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிா்கொள்கிறது இந்திய அணி. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று 5-வது பட்டத்தைக் கைப்பற்ற ஆர்வமாக உள்ளது. இந்தியா 2009, 2010, 2018-ல் அரையிறுதி வரை தகுதி பெற்றது. அதே நேரம் இளம் வீராங்கனைகளைக் கொண்ட இந்திய அணி முதல் முறையாகப் பட்டம் வெல்லும் முனைப்போடு உள்ளது. உலகக் கோப்பையில் மொத்தம் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன.
சிட்னியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதல் ஓவரில் மட்டும் நிதானமாக விளையாடிய இந்திய அணி 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்து அசத்தியது. அதன்பிறகு இந்திய அணி தடுமாற ஆரம்பித்ததுதான் சோகம்.
மந்தனா, 10 ரன்களில் ஆட்டமிழந்தார். 16 வயது ஷஃபாலி வர்மா அடுத்த ஓவரில் 29 ரன்களுடன் வெளியேறினார். இதுபோதாது என்று அடுத்த ஓவரில் கெளர் 2 ரன்களில் ஆட்டமிழக்க, நிலைமை மாறிப்போனது. 10 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்தது இந்தியா. அடுத்த ஆறு ஓவர்களில் இந்திய அணி ஒரு பவுண்டரி மட்டும் அடித்தது. இதனால் இந்திய அணி எப்படியும் 150 ரன்களாவது தாண்டும் என்கிற எதிர்பார்ப்பு வீணானது. ரோட்ரிகஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி மொத்தமாக 3 பவுண்டரிகள் மட்டுமே அடித்ததால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் போனது. தீப்தி சர்மா, 46 பந்துகளில் 49 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


