அதிகரித்துள்ள காற்று மாசு: தில்லி டி20 ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா?
தீபாவளி சமயத்தில் தில்லியில் காற்றுமாசு அதிகரித்திருந்தாலும் அடுத்தச் சில நாள்களில் நிலைமை மாறும் என


தில்லி மக்கள் எதிா்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னையாக காற்று மாசு உள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு வெடித்ததால் தில்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது. தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையில் தில்லியில் இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டி20 ஆட்டம் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
எனினும் வரும் ஞாயிறன்று தில்லியில் டி20 ஆட்டம் நிச்சயம் நடைபெறும் என்று பிசிசிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது. பிசிசிஐ சார்பில் பேசிய நிர்வாக அதிகாரி கூறியதாவது: தில்லி டி20-யை மாற்றும் திட்டம் எதுவும் கிடையாது. தீபாவளி சமயத்தில் தில்லியில் காற்றுமாசு அதிகரித்திருந்தாலும் அடுத்தச் சில நாள்களில் நிலைமை மாறும் என நம்பிக்கையாக உள்ளோம் என்று கூறியுள்ளார்.
அடுத்த மாதம், இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் வங்கதேச அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 3 அன்று தொடங்கி நவம்பர் 10 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 14 அன்று தொடங்கி நவம்பர் 26 அன்று நிறைவுபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...