ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு அளியுங்கள்: ஹர்பஜன் சிங் கோரிக்கை

அவர் பந்துகளை நன்குச் சுழலச் செய்வார். பலவகையான பந்துவீச்சு முறைகளைக் கையாள்வார்.

News image
Updated On :22 நவம்பர் 2019, 5:51 am

இந்தியாவில் மே.இ.தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒரு நாள் தொடா்களில் பங்கேற்கிறது. இந்தத் தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்திய ஒருநாள், டி20 அணிகளில் அஸ்வினைச் சேர்க்கவேண்டும் என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டியளித்ததாவது: ஆரம்பத்தில் ஒரு சுழற்பந்துவீச்சாளர் தேவை என்றால் விக்கெட்டுகள் அதிகம் எடுக்கும் அஸ்வினை நீங்கள் தேர்வு செய்யவேண்டும். அவருக்கு ஏன் வாய்ப்பளிக்கக் கூடாது? டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாகப் பந்துவீசி வருகிறார். 

அவர் பந்துகளை நன்குச் சுழலச் செய்வார். பலவகையான பந்துவீச்சு முறைகளைக் கையாள்வார். வாஷிங்டன் சுந்தர் இதைக் கற்றுக்கொள்ளவேண்டும். அவர் நன்றாக விளையாடவேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். இளம் வீரர்களை அணிக்குள் சேர்ப்பதை நான் ஆதரிக்கிறேன். ஆனால், அவர்கள் பல உத்திகளைக் கற்றுக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கடுமையான போட்டிக்கு மத்தியில் அவர்கள் நீக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.