டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ரோஹித் ஷர்மா தான் உலகின் தலைசிறந்த ஒருநாள் வீரர்: விராட் கோலி புகழாரம்

உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிபெற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறினார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:25 am

Raghavendran

2019 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் செவ்வாய்கிழமை மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தான் வெற்றிபெற முடிந்தது. அதிலும் உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிபெற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த லீக் போட்டி எங்களை மேலும் தயார்படுத்திக்கொள்ள சிறந்த வாய்ப்பாக அமையும். நாங்கள் நேர்மறை எண்ணத்துடன் அரையிறுதியில் விளையாட உள்ளோம். 

5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவது அதிரடி முடிவாக இருந்தாலும், அவ்வப்போது பந்துவீச்சு முறைகளை மைதானத்தின் தன்மைக்கு ஏற்றவாறு மாற்றி வருகிறோம். போட்டி தினத்தில் சிறந்த பதினோறு பேர் கொண்ட அணியுடன் களமிறங்குவதுதான் எங்கள் இலக்கு. அதனால் தான் அனைத்து போட்டிகளிலும் ஒரே அணியுடன் களமிறங்க இயலாமல் போகிறது. இந்த மாற்றங்களால் நாங்கள் எதிர்பார்க்கும் முடிவுகளும் கிடைக்கிறது. 

என்னைப் பொறுத்தவரையில் ரோஹித் ஷர்மா தான் உலகின் தலைசிறந்த ஒருநாள் வீரர். ஏனென்றால் அவர் விளையாடும் ஒவ்வொரு முறையும் மிகப்பெரிய அளவில் ரன்களைக் குவிக்கிறார். அதேபோன்று இப்போதைய சூழலில் பும்ரா தான் மிகச்சிறந்த பந்துவீச்சாளர். ஆட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு ஏற்ற மாதிரி பந்துவீசுகிறார். ஹார்திக் பாண்டியா சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்கிறார். பேட்டிங்கின் போது பந்துவீச்சாளராகவும், பந்துவீச்சில் பேட்ஸ்மேனாகவும் அந்த மனநிலையில் சிந்தித்து விளையாடுகிறார் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.