தில்லி கிரிக்கெட் சங்கத்தில் ரகளை: தலைவராக கம்பீர் பொறுப்பேற்க வலியுறுத்தல்!
தில்லி கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் நேற்று ரகளை ஏற்பட்டது...


தில்லி கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் நேற்று ரகளை ஏற்பட்டது. ஒரு தீர்மானத்தை அனைவருடைய சம்மதமும் பெறாமலேயே நிறைவேற்றிவிட்டதாக இரு தரப்பினரிடயே பூசல் ஏற்பட்டது. கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் விடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதையடுத்து தில்லி கிரிக்கெட் சங்கத்தைக் கலைக்க வேண்டும் என்று கெளதம் கம்பீர், கங்குலியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கம்பீர் தேர்வாகவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. கேகேஆர் அணியை அவர் வழி நடத்திய விதம் மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் உள்ள தொடர்பு காரணமாக இந்தப் பதவிக்கு அவர் தேர்வாகவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்கள் தில்லி கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...