நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ரூ. 6.75 கோடிக்கு பியூஷ் சாவ்லாவை ஏன் தேர்வு செய்தோம் தெரியுமா?: சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம்

தரமான லெக் ஸ்பின்னராக சாவ்லா தன்னை நிரூபித்துள்ளார் என்று கூறியுள்ளார்... 

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:36 pm

எழில்

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 338 வீரர்கள் கலந்துகொண்டார்கள். 73 வீரர்களைத் தேர்வு செய்யலாம் என்கிற நிலைமையில் 8 அணிகளும் சேர்ந்து 62 வீரர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளன. எனினும் அனைத்து அணிகளும் தங்களுக்கான 8 வெளிநாட்டு வீரர்களை ஏலம் வழியாகத் தேர்வு செய்து கொண்டன. யூசுப் பதான், விஹாரி போன்ற இந்திய அணிக்காக விளையாடிய, விளையாடும் வீரர்கள் சிலர் எந்த அணிக்கும் தேர்வாகாமல் ஏமாற்றம் அடைந்தார்கள். 

நேற்றைய ஏலத்தில் பியூஷ் சாவ்லாவை ரூ. 6.75 கோடிக்குத் தேர்வு செய்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்த முடிவு குறித்து சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியதாவது:

சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும். மேலும் அணிக்குக் கூடுதலாக ஒரு லெக் ஸ்பின்னர் வேண்டும் என தோனி விரும்பினார். அதனால் தான் அணியில் ஏற்கெனவே நிறைய சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் பியூஷ் சாவ்லாவை ஏலத்தில் தேர்வு செய்தோம் எனக் கூறியுள்ளார்.

ஏலத்தில் சிஎஸ்கே சார்பாகப் பங்கேற்ற முன்னாள் வீரர் எல். பாலாஜி கூறியதாவது: சென்னை ஆடுகளத்துக்கு எத்தனை சுழற்பந்துவீச்சாளர்களைக் கூட வைத்துக்கொள்ளலாம். தோனியின் விருப்பம் இது. சாவ்லா, சிஎஸ்கே அணிக்குப் பொருத்தமாக இருப்பார் என்று கூறியுள்ளார்.

சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளெமிங் கூறியதாவது: சாவ்லாவின் திறமை மீது எங்களுக்கு அதிக மதிப்பு உண்டு. அவருக்கு தோனியுடன் நல்ல நட்பும் புரிதலும் உள்ளன. தரமான லெக் ஸ்பின்னராக சாவ்லா தன்னை நிரூபித்துள்ளார் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.