நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

ஐபிஎல் ஏலத்திலிருந்து சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் விலகல்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களுக்கான இங்கிலாந்து அணியில்... 

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:31 pm

எழில்

வரும் டிசம்பா் 19-ஆம் தேதி முதன்முறையாக கொல்கத்தாவில் ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்னதாக 71 வீரா்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக்கொண்டன. ஐபிஎல் ஏலத்தில் 332 வீரர்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. 

ஐபிஎல் 2019 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற 5 வீரர்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டார்கள். அவர்களில், இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸும் ஒருவர். இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் இருந்து விலகியுள்ளார் சாம் பில்லிங்ஸ். மேலும் அடுத்தச் சில மாதங்களுக்கு எந்தவொரு டி20 போட்டியிலும் விளையாடுவதில்லை என அவர் முடிவெடுத்துள்ளார். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களுக்கான இங்கிலாந்து அணியில் சாம் பில்லிங்ஸ் இடம்பெறவில்லை. இதனால் கெண்ட் கவுண்டி அணிக்காக அடுத்த ஒரு வருடம் விளையாடி தன் திறமையை நிரூபிக்கவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.