டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஐபிஎல் ஏலத்திலிருந்து சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் விலகல்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களுக்கான இங்கிலாந்து அணியில்... 

News image
Updated On :14 டிசம்பர் 2019, 5:23 am

வரும் டிசம்பா் 19-ஆம் தேதி முதன்முறையாக கொல்கத்தாவில் ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்னதாக 71 வீரா்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக்கொண்டன. ஐபிஎல் ஏலத்தில் 332 வீரர்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. 

ஐபிஎல் 2019 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற 5 வீரர்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டார்கள். அவர்களில், இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸும் ஒருவர். இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் இருந்து விலகியுள்ளார் சாம் பில்லிங்ஸ். மேலும் அடுத்தச் சில மாதங்களுக்கு எந்தவொரு டி20 போட்டியிலும் விளையாடுவதில்லை என அவர் முடிவெடுத்துள்ளார். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களுக்கான இங்கிலாந்து அணியில் சாம் பில்லிங்ஸ் இடம்பெறவில்லை. இதனால் கெண்ட் கவுண்டி அணிக்காக அடுத்த ஒரு வருடம் விளையாடி தன் திறமையை நிரூபிக்கவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.